கோவையில் வாலிபரை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் சாலை மறியல்…!
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் மனைவி ராக்காயி (60). இவர்களுக்கு மூன்று மகள் இரண்டு மகன் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மகா மகேஸ்வரன் (29) என்பவர் கடந்த எட்டாம் தேதி சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக…
கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு…96.66 சதவீத தேர்ச்சி…!
கோவை மாவட்டத்தில் 2026ம் ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்தது. இந்த பொதுத்தேர்வில் 96.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 35,448 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் . இதில் 34,264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் மட்டும் 16,235 பேர் தேர்வு எழுதியதில் 15,531 பேரும், மாணவிகள் 19,213 பேர் தேர்வு எழுதி 18,733 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் மாணவர் சேர்க்கை…
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் இன்று துவங்கியது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்சி (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டுவளர்ப்பு, பிடெக் வேளாண் பொறியியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிடெக் உயிரி…
கோவையில் அரசு அதிகாரிகள் லீவு… புகார் மனுக்களுக்கு எப்போது தீர்வு…!
கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், மாவட்ட அளவில் பல்வேறு துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து சென்று விட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலான துறை அதிகாரிகள் கடந்த 7 நாட்களாக பணிக்கு வரவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, உள்ளூர் திட்ட குழுமம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை என பல்வேறு துறைகளில் அதிகாரிகள் விடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக…
ஆள் இல்லாத கோவை மேற்கு பைபாஸ் ரோடு… ரூ. 250 கோடி வெட்டி செலவு…!
கோவை மேற்கு பைபாஸ் ரோடு மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டது. 4 வழிப்பாதையாக 17.50 மீட்டர் அகலத்தில் இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த ரோடு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது. நகரில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும், பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் 50 முதல் 60 சதவீதம் குறையும் என…
சிங்காநல்லூர் மேம்பாலம் பணிக்கு அடுத்த வாரம் டெண்டர் திறப்பு…
கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி…
கோவையில் குப்பை விவகாரத்தில் மூதாட்டியை வெட்டி கொலை செய்தவர் கைது…!
கோவை ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர் வயல் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்லி ( 72) . இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தனியார் நிறுவனஊழியரான நோபில் வாட்சன் ( 47) என்பவருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. ஜெஸ்லி அடிக்கடி நோபில் வாட்சன் வீட்டு முன்பு குப்பையை கொட்டி வந்துள்ளதாக தெரிகிறது. இதை நோபில் வாட்சன் கண்டித்து வந்தார். இன்று காலை ஜெஸ்லி குப்பை கொட்ட வந்தபோது அவருடன் நோபில் வாட்சன் வாக்குவாதம்…
கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவு ரூ. 6 கோடி…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்ட அளவில் சுமார் 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 3540 ஓட்டு சாவடிகள் அமைப்பு, ஓட்டு சாவடி ஆவணங்கள், தேர்தல் பொருட்கள், வாகனங்கள், தள வாடங்கள், கேமராக்கள், உள் கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அந்த கல்லூரி வளாகத்தில் 300 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், கவுண்டிங் சென்டர் வளாகம் முழுவதும் பாதுகாப்பு…
கோவை மாவட்டத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை…!
கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை காலை முதல் ஓட்டு எண்ணிக்கை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜிசிடி) நடக்கவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடம் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம்…
கோவையில் நகைக்காக மூதாட்டி கொலை…!
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் . இவர் கோவை மண்டல பத்திரப்பதிவு துறையில் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவரது மனைவி கோமதி (65). இவர் தனது அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். நேற்று இவர் தனது தாயை பார்ப்பதற்காக லண்டனிலிருந்து கோவை வந்தார். அவர் ராமநாதபுரம் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கே கோமதி கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவரது கழுத்திலிருந்த…
